நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறான கொவிட் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, January 28th, 2021

நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மற்றும் நடைபெறாத தினங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரிசோதனையில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற பணிக் குழாமினரும் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம்!
ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு பயணம் - ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் எதிர்பார்ப்பு!
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி மரணம் - அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில்...