யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021

யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் (27) மக்கள் பாவனைக்காக அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பல வருடங்களாக யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து தமது சேவைகளை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
பாண்டிச்சேரி - காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் ட...

"நீதியரசர் பேசுகின்றார்" நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்...
வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...
கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில்...