பெற்றோலிய களஞ்சிய விநியோகம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை ஆராய்கிறது கோப் குழு!
Tuesday, January 19th, 2021
இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இன்று ஆராயப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் அதனை விநியோகிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இன்று கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார வழிகாட்டல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி கோப் குழு இன்றைய தினம் கூடவிருப்பதாகவும் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து..
Related posts:
நாளை முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை !
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


