நாடாளுமன்றை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று – மூன்றாவது நபராக அமைச்சா் வாசுதேவா நாணயக்காராக்கும் கொரோனா தொற்றுறுதி!
Monday, January 11th, 2021
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ உறுதிப்படுத்தினார்.
முன்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் மூன்றாவது கொரோனா தொற்றாளராக வாசுதேவ நாணயக்கார அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!
தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!
சிறு முயற்சியாகர்களை ஊக்குவிக்க விசேட "விருது" - கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு!
|
|
|


