கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
Tuesday, December 1st, 2020
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் - சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்ப...
இலங்கையுடன் டொலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ளப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல்!
இலங்கை ரூபா தொடர்ந்தும் வலுவான நிலையில் – இவ்வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒ...
|
|
|


