சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை!
Wednesday, November 4th, 2020
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி சவுதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு இரண்டு விமானங்களில் இலங்கையர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்- 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் விடுதிகளில் தங்கியிருப்போர் மற்றும் பணிப்புரிவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற வானிலை - 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...
டெங்கின் தாக்கம் அதிகரிப்பு - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு - தென்னை அபிவிருத்தி அதிகார சபை...
|
|
|


