கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, October 12th, 2020

கொரோனா வைரஸ் பரவலானது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும் குறித்த அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலானது சற்று குறைந்து காணப்படுவதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றை உரிய முறையில் கையாளப்படாவிட்டால் அது சமூக தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடக குழு உறுப்பினருமான மருத்துவர் வாசன் ரத்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு மாகாணத்திற்கு அண்டிஜன் பரிசோதனை தேவையற்ற ஒன்று என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வர...
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவவகாரம் - சேனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை ந...