கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!
Wednesday, September 16th, 2020
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகையில் 17,854 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொல்பெகியா பெக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் என வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!
சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் யாழ...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் - அரசாங்கம் உறுதியளிப்பு!
|
|
|


