மூன்று லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யப்படவில்லை!
Sunday, July 31st, 2016
இவ்வாண்டு வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
18 முதல் 35 வயதான இந்த இளைஞர் யுவதிகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து சமூக வலைத்தள வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேண்டும் என்றே தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை?
மிருசுவில் பேருந்து சேவையை எழுதுமட்டுவாழ்வரை நீடிக்கவும் - பாடசாலைச் சமூகம் கோரிக்கை!
புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்கா...
|
|
|


