உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரிக்கை!
Monday, August 24th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வருடாவருடம் நடாத்துகின்ற மதிப்பீட்டுப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கணித, உயிரியல் பிரிவின் மாணவர்களுக்கான மதிப்பீட்டுப் பரீட்சையாக இது இருக்கும் என்பதுடன் வடமாகாண மாணவர்களுக்கான ஒரு பயிற்சிப் பரீட்சையாகவும் இது அமைகின்றது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு இந்தப் பரீட்சைகள் உதவும் என்பதால் வட மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதை அந்தந்தப் பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யுமாறு வெளிக்கள நிலைய இணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
251 இந்திய மீனவர்கள் விடுதலை!
கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்...
ஜனாதிபதி ரணில் உத்தரவு - வடக்கில் படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!
|
|
|


