புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
Friday, August 21st, 2020
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு எடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்தே, அரசியல் அமைப்பு தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்றை நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில்!
நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படுகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை!
|
|
|


