இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு — தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
Wednesday, July 8th, 2020
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரையான காலப்பகுதியில் 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
அத்துடன் இதுவரை ஒரேயொரு வன்செயல் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Related posts:
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் போர் கப்பல்கள்!
டெங்கு: 5 மாதங்களில் 150 பேர் பலி!
36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்...
|
|
|


