இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை – வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
Monday, June 22nd, 2020
வெப்பத்தை மதிப்பீடு செய்யும் கருவிகள் இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் வெப்பதத்தை கணிக்கும் 16 ஆயிரம் கருவிகளை இறக்குமதி செய்ய கல்வி அமைச்சு கேள்வி மனு கோரியிருந்தது.
இந்த நிலையில், அவற்றை கல்வி அமைச்சுக்கு இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் சுகாதார அமைச்சு அவற்றை பெற்றுத்தரும்வரை பாடசாலைகளை திறக்காமல் இருக்க முடியாது என்றும் குறித்த கருவிகள் இன்றி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைசார் தரப்பினர் தீர்மானித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மேலும் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!
சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஜனாதிபதி ஜப்பான் பயணம் - ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்...
|
|
|


