அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை!
Friday, May 29th, 2020
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், சில வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!
வல்லை மதுபான சாலையில் வாய்த்தர்க்கம் - போத்தல் குத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கையின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு நாளை இந்தியாவிலிருந்து வருகிறது விசேட தூதுக்குழு!
|
|
|


