இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!
Tuesday, May 26th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் எல்லா சந்தர்பங்களிலும் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விளக்கமறியலிலிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் :...
வைத்தியர்களின் வேலை நிறுத்தம்: வைத்தியசாலைகள் முடக்கம்!
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது - மஹிந்த தேசப்பிரிய குற...
|
|
|


