வயோதிபரை பலியெடுத்த கார் பொலிஸாரிடம் சிக்கியது!
Tuesday, July 26th, 2016
கடந்த ஞாயிற்றுகிழமை இரவு கல்வியங்காடு பகுதியில் வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி மரணத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற காரை நேற்று (25) கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியங்காடு பகுதியில் இரவுவேளை வீதியில் சென்ற வயோதிபர் ஒருவரை காரினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு காரில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விபத்துக்குள்ளான வயோதிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் குறித்த வயோதிபர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிசார் விபத்துக்கு காரணமாக காரினை கைப்பற்றியுள்ளதுடன் , காரின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
Related posts:
தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக்கொளள அனுமதி!
யாழ் மாவட்ட இராணுவத் தளபதிக்கு இடமாற்றம்!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா...
|
|
|


