கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020

கொரோனா தெற்றுக்குள்ளான ஒருவர் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த நோய்த் தெற்றை எதிர்கொள்வதற்காக வைத்தியாசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த மதபோதகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்ப்பாண மக்களிடையே அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காகவும் அத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் பல்வேறு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்த நிலையிலேயே அமைச்சர் இன்று பிற்பகல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் துறைசார் வைத்திய அதிகாரிகளையும் ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகி்றவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...
முன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு - இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...

சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில்  உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...