புகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி!

Saturday, July 23rd, 2016

காலி, அம்பலாங்கொடை அருகேயுள்ள கரித்தகந்த பிரதேசத்தில் புகைவண்டியால் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதான பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி  சென்றுகொண்டிருந்த  புகையிரதமே குறித்த மாணவியை மோதியுள்ளது. .சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக ஜன...
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...