அரிசி இறக்குமதிக்கு தடை – அரசாங்கம்!
Friday, February 14th, 2020
அரிசி இறக்குமதியை தடை செய்யும் வகையிலான கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அரிசி இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டிற்கு 100 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சந்தையில் அரிசி விலை அதிகரித்துள்ள நிலையிலேயெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல் கிலோவொன்றுக்கு 50 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.,
Related posts:
மீண்டும் சர்சையில் மாட்டிய பொலிஸ்மா அதிபர்!
கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை - தேசிய தேர்தல்கள் ஆணைக்கு...
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளது இந்தியா – இந்திய ரிசேவ் வங்கி அனுமதி!
|
|
|


