யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!
Friday, January 31st, 2020
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று விளையாட்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்
முன்பதாக பாடசாலையின் பிரதான வாயிலில் சிறப்பு வரவேற்களிக்கப்பட்டு விசேட பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
அதன் பின்னர் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு விழா அரங்கிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடசாலை அதிபர் தலைமையிலான அதிதிகாளால் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாற்றுத் திட்டமொன்றும் தேவை! - டக்ளஸ் தேவானந்தா
தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!
தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உற...
|
|
|
















