அனுமதிகளுக்காக சட்டவிரோத கடிதங்கள் – கல்வி அமைச்சு விடுத்துள்ள பணிப்பு!

Friday, December 6th, 2019


பாடசாலைகளில் அனுமதிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 427 சட்டவிரோத கடிதங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சு பணித்துள்ளது.

2019 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நவம்பர் 26ஆம் திகதி வரையான பகுதியிலேயே இந்தக் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலக கையொப்பங்களுடன் இந்த கடிதங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த கடிதங்கள் தொடர்பில் 3வாரங்களுக்குள் அறிக்கை தருமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

Related posts:


வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  ஜனாதிபதி, பிரதமரை விரைவில் சந்தித்துப் பேச்சு!
இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை - இலங்கை நிதியமை...
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண...