ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, October 15th, 2019


கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(14) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:


இன்றுமுதல் அனைவருக்கும் "பூஸ்டர்" தடுப்பூசி கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்...
கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரை...