இராணுவத்தினர் மீது தாக்குதல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்!!
Sunday, August 18th, 2019
இளைஞர் குழுவொன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இத் தாக்குதல் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று இத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Related posts:
மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் - அமைச்சர் பிரசன்ன ர...
விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் !
|
|
|


