மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!

Wednesday, August 14th, 2019


கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...
போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் ...
வவுனியா மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்க ஜனாதிபதி அனுமதி !