தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு!
Sunday, September 26th, 2021
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில், சடலம் ஒன்று மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முதியவர் எனவும் அவர் தொடர்பிலான தகவல்களை அறிய மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலத்திரனியல் ஊடகங்களுக்கு சுயாதீன ஒளிபரப்பு அதிகார சபை!
பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி மோசடி - நீதிமன்று அதிரடி உத்தரவு!
உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபத...
|
|
|


