டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் : மலேசிய அரசு அதிரடி !
Wednesday, July 24th, 2019
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் என, மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கியுள்ளவர்கள், அவரவர் நாடு திரும்ப பொதுமன்னிப்பு திட்டத்தை அந் நாடு அமுல்படுத்துகிறது.
இதன்படி, இந்திய மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் தண்டத் தொகையாக செலுத்திவிட்டு, அவரவர் நாட்டு தூதரக உதவியுடன் மலேசியாவை விட்டு வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், வரும் டிசம்பர் 31க்குள் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மலேசியாவில் இருந்து தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்!
கொரோனா தொற்று: அமெரிக்க இளம்பெண் மருத்துவரின் குமுறல்!
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!
|
|
|


