சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
Monday, July 22nd, 2019
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம்!
அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கை - நுகர்வோர் விவகார ...
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
|
|
|


