5G வலையமைப்பினை அறிமுகம் செய்ய 30 மில்லியன் டொலர்களை முதலீடு!
Tuesday, July 2nd, 2019
பல்வேறு நாடுகளிலும் 5G வலையமைப்பு மிக வேகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரிலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 5G வலையமைப்பினை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக 40 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.அதாவது ஏறத்தாழ 29.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்த திட்டத்தினை சிங்கப்பூரின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஸ்வார்ன் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ரெலிகொம் நிறுவனமான ஹுவாவி உலகின் பல்வேறு நாடுகளில் மொபைல் வலையமைப்பினை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனமே சிங்கப்பூரில் 5G தொழில்நுட்பத்தினை வழங்க அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
4 கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு!
சூரியனில் சக்திவாய்ந்த வெடிப்புகள்!
சந்திரயான் - 3 நவம்பரில் விண்ணுக்கு - இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை!
|
|
|


