ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் செப்பனிடப்பட்டன!
Thursday, May 16th, 2019
அரியாலை மேற்கு இளையதம்பி குறுக்கு வீதி மற்றும் A9 கண்டி வீதி உப – ஒழுங்கை ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பிரனது முயற்சியால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக செப்பனிடப்படாத நிலையில் காணப்பட்ட குறித்த வீதிகளால் அப்பகுதி மக்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் அதை செப்பினிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்சியின் உறுப்பினர் திருஞானலிங்கம் அவர்களின் சிபார்சுக்கு அமைவாக குறித்த வீதிகள் செப்பனிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு அதிபரிப்பு : நீதிமன்றம் எச்சரிக்கை!
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் சூழ்ச்சியில் சிக்கிவிட...
|
|
|




