இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிய பேருந்துகள் கொள்வனவு!
Sunday, May 12th, 2019
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 325 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் நோக்கில் இவ்வாறு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் பின்புறம் உயரத்தை கொண்ட 50 ஆசனங்களைக் கொண்ட 272 பேருந்துகளைகளை கொள்வனவு செய்வதற்கும், 33 ஆசனங்களைக் கொண்ட 53 அதி சொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபார்சுக்கமைய 5 வருடத்தில் மீள் செலுத்தக்கூடிய ஒத்தி வைக்கப்பட்ட வரி அடிப்படையில் மேற்படி 325 பேருந்துகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
Related posts:
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்ச...
வட்டுக்கோட்டை மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கோரிக்கை!
|
|
|


