ஐ. நாவின் உபகுழு இன்றுஇலங்கைக்கு!

Tuesday, April 2nd, 2019

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளை தடுப்பது தொடர்பான உப குழு இன்று(02) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

நான்கு அதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுதந்திரம் வரம்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பிலும் சித்திரவதைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: