விவசாய நடவடிக்கைக்காக 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – ஜனாதிபதி!
Saturday, March 30th, 2019
விவசாயிகள் தயாராக இருந்தால், மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின் நீரை 3 போகங்களுக்கு விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவிய பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பராக்கிரம சமுத்திரத்தை போன்று இவ்வாறானதொரு பாரிய நீர்தேக்கத்தை அமைப்பதற்கு நாட்டில் உள்ள சிறந்த பொறியியலாளர்கள் உதவியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, மொரக்காகந்தை நீர்த்தேகத்தின் ஊடாக நீரை பெறும் விவசாயிகள், 3 போகங்கள் விவசாயம் செய்வதற்கு தயாராக இருந்தால், அதற்கான தேவையான அளவு நீர் மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தில் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கை!
அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யும் - அமைச்சர் தயா கமகே!
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.
|
|
|


