நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, March 20th, 2019
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா உட்பட பல மாவட்டங்களிலும் நாளை வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அவ்வாறு அதிக வெப்பமான காலநிலை நிலவும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக காலப்பகுதியில் அதிகளவான நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களில் 40 பாகை செல்சியஸில் கடுமையான வெப்பநிலை காணப்படுகிறது. அது 54 பாகை செல்சியஸாக அதிகரிக்கும் பட்சத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related posts:
கொரோனா வைரஸை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பது கடினம் - சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க!
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
தனிமைப்படுத்தலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விருந்தகங்கள் தொடர்பில் அவதானம் - சுகாதார அமை...
|
|
|


