இந்தோனேசியாவில் கனமழை – 42 பேர் உயிரிழப்பு!
Monday, March 18th, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் பெய்த கடும் மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மீண்டும் தெரிவு!
வாகன விபத்து: சீனாவில் 14 பேர் உயிரிழப்பு!
கடும் புயல்: நடுவானில் திணறிய இளவரசர் வில்லியம்!
|
|
|


