ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு!
Monday, March 4th, 2019
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் யோசனைக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், அந்த யோசனை செயலிழந்துள்ள நிலையில், இந்த புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிந்தால் அதற்கு முன்னர் தூக்குத் தண்டனையை அமுல்படுத்தி போதைப் பொருள் ஒழிப்புக்கு பெரிய பிரசாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் போட்டியிட்டால், மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!
முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் - யாழ் ம...
கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய...
|
|
|


