யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!
Thursday, February 7th, 2019
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நீண்டகாலமாக உள்ளன என்று கல்விச் சமூகம் தெரிவித்தது.
நூலக உதவியாளர், ஆய்வு கூட உதவியாளர், சாரதி, கட்டட வேலை செய்பவர், மின் வேலை செய்பவர், பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 34 வகையான வேலைகளுக்கு சுமார் 50 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இது தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது: கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பித்தாருங்கள் என்று கல்வி அமைச்சின் அனைத்துக் கூட்டங்களிலும் கோரிக்கை முன்வைத்தோம். இறுதியாக வந்த மதிப்பீட்டுக் குழுவுக்கும் இதுபற்றித் தெரியப்படுத்தியுள்ளோம் ஆனால் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
வீதிகளில் பயணிக்கும் போதே சாரதிகளிடம் மருத்துவ பரிசோதனை!
தோழர் அன்பு அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்...
|
|
|


