சேனா புழுவைப் போன்று பிறிதொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு!
Friday, January 25th, 2019
நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் ஒன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேனா என்ற படைப் புழுவைப் போன்று நாவல் நிறத்தையுடைய குறித்த புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை, நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் புதிய நடைமுறையே அமுலிலிருக்கம் - அரசாங்க அதிபர் மக...
எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் தெரிவு!
இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு!
|
|
|


