பால் மாவின் விலைகள் உடனடியாக அதிகரிக்கப்படாது- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!
Tuesday, January 8th, 2019
சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளை அதிகரிப்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு அதன் விநியோக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆய்வுகளை நடத்துகிறது.உடனடியாக அவற்றின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது.
இது குறித்து நிதி அமைச்சுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேணடும் என்று கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
நவீன வசதிகளுடன் கூடிய S13 ரயில் இலங்கைக்கு!
அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் ...
|
|
|


