மதுபோதையில் தாயாரைத் தாக்கிய மகனுக்கு விளக்கமறியல்!
Friday, July 1st, 2016
தனது தாயாரைத் தும்புத் தடியால் தாக்கிய மகனை எதிர்வரும்- 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (29) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன் தினமும் மதுபோதையில் வந்து தாயாருடன் வாக்குவாதப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதுபோதையில் வந்த மகன் தனது தாயாரை வீட்டிலிருந்த தும்புத் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம்- 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சி. சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Related posts:
மேலும் ஒருதொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
|
|
|
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தக...
புத்தாண்டு தினத்தன்று வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு : 758 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாள...
இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!


