பேருந்து – லொரி மோதி கோர விபத்து – 50 பேர் உயிரிழப்பு!
Wednesday, December 26th, 2018
காங்கோ குடியரசு நாட்டில் லொரியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.
இந்த விபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related posts:
சவுதிக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்!
அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த விலங்குகள் !!
மத்திய கிழக்கு அனைத்திலும் மோதல் வெடிக்கும் – டிரம்ப் எச்சரிக்கை!
|
|
|


