ஆசிய கிண்ண ரி20 தொடர் – நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு!
Friday, December 14th, 2018
ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.
இந்த தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் மாற்றப்பட்டது.
தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ரி 20 உலகக் கிண்ணத்திற்கு முன் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளது.
Related posts:
ஸ்மாட்ஸ், பவவேல் மோதல்: பவவேல் வைத்தியசாலையில் அனுமதி!
ஐ.சி.சி.யால் மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ்: தென்ஆபிரிக்கா - அயர்லாந்து போட்டியில் அறிமுகம்!
6138.1 கோடி ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !
|
|
|


