நாடாளுமன்றம் கலைப்பு – ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு இன்று!
Thursday, December 13th, 2018
நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட உள்ளது.
குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
குறித்த மனுக்களை ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை வரலாற்று சிறப்பு மிக்க வழக்கின் தீர்ப்பிற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !
நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் - நகர அபிவிருத்தி அதிகா...
இலங்கைத் தொழிலாளர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தகவல்!
|
|
|


