கட்டணம் குறைப்பது தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை!
Wednesday, December 5th, 2018
பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் இன்று(05) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
பேருந்துகள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று(05) காலை 10 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கு அமைய டீசலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக பேருந்து கட்டணங்களும் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை!
கடும் வெப்பமான காலநிலை - செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அ...
|
|
|


