மாடுகளுக்கு கால்வாய்நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
Friday, November 23rd, 2018
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை அரச கால்நடை வைத்திய நிலையத்தினால் மாடுகளுக்கான கால்வாய் நோயத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசத்தில் கிராமங்களில் இவ் வைத்திய நிலையத்தினால் கால்வாய் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றன.
இவ் வைத்திய நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தில் கால்வாய் நோய்க்குத் தடுப்பூசி ஏற்றாத கால்நடைப் பண்ணையாளர்கள் வைத்திய நிலையத்தினைத் தொடர்புகொண்டு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் கவனத்திற்கு!
தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!
|
|
|


