நல்லூரில் தடையற்ற மின்சாரத்துக்கு மின்சாரசபை நடவடிக்கை!
Sunday, August 19th, 2018
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா காலத்தில் தடையின்றிய மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது.
உற்சவ காலத்தில் இடையறா மின் விநியோகத்துக்கென இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளரின் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இருந்து 800 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின் பிறப்பாக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.
தினமும் இரவு 10 மணி வரை ஆலயச் சுற்றாடலுக்கான முழு விநியோகமும் இந்த மின் பிறப்பாக்கியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
Related posts:
முதியவர் சடலமாக மீட்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|
|


