நாட்டின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு!

Wednesday, August 8th, 2018

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 12.1 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய சங்க நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்தமையே இதற்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஊடாக 427 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆடை ஏற்றுமதி ஊடான வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகரிப்பாக கணிக்கப்படுகின்றது.

Related posts:

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை ...
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர...
ராஜீவ் காந்தி கொலை சம்பவம் – விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என தகவல்!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு அ...
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் - காணி அமைச்சின் செயலாளர...
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...