இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருமலையில்!
Friday, July 13th, 2018
இலங்கையில் விரைவில் புதிதாக சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் ஒன்றில் கூறியுள்ளார்.
நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த திட்டம் திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.
இந்த திட்டம் திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத வலி தெற்கு பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே - புதிய உயர்ஸ்தானிகரைாக பத...
|
|
|


