கைவிடப்படுகின்றது பொருத்து வீட்டுத் திட்டம்?

Sunday, June 19th, 2016
லட்சுமி மிட்டல் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவிருந்த பொருத்துவீட்டுத் திட்டத்தினைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு வருகைதந்திருந்த உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் – குறித்த வீட்டுத்திட்டத்திற்குப் பதிலாக வடக்கு மாகாணத்தின் சூழலுக்கேற்றவகையில் மாற்றுத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தத் திட்டம் தொடர்பாக எதிர்காலத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts:


பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமா...
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா ...
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் - சுகாதார அமைச்சு எ...