சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா பத்தாயிரம் அபராதம் !
Friday, June 17th, 2016
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தலா பத்தாயிரம் ரூபா அபராதமாகவும் விதித்து மல்லாகம் மாவடட நீதவான் எம். ஏ. யூட்சன் நேற்று முன்தினம் புதன்கிழமை(15-06-2016) தீர்ப்பளித்தார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரும் நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Related posts:
கொழும்பு துறைமுக நகர சீன நிறுவனம் உலக வங்கியின் கறுப்புப் பட்டியலில்!
தரம் 5 : பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!
|
|
|


