பட்டதாரிகளை பிரதேச செயலகத்தில் பதியுமாறு கோரிக்கை!
Monday, June 25th, 2018
பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேலைதேடும் பட்டதாரிகளை பயிற்சிக்கு இணைப்புச் செய்து கொள்வதற்கு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட இம்மாதம் 30 ஆம் திகதியன்று 45 வயதிற்கு குறைந்த பட்டம் பெற்ற விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் அலுவலக நாள்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
2 மாதங்களில் 600 தொன் மீன் ஏற்றுமதி!
வருமானவரி சட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் செயலமர்வு - உள்நாட்டு இறைவரித்திணைக்களம்!
கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நடமாறும் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை - இலங்கை போக்குவரத்து சபை...
|
|
|


